அரசு மகளிா் கல்லூரியில் சுதந்திர தின பேச்சுப் போட்டி

தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் சுதந்திர தின பேச்சுப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் சுதந்திர தின பேச்சுப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கல்லூரியின் கல்லூரியின் சமூக சேவைக் குழுவும், லியோ சங்கமும் இணைந்து ‘ஆனந்த சுதந்திரம்‘ எனும் தலைப்பில் நடத்திய 75-ஆவது சுதந்திர தின பேச்சுப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். சமூக சேவைக் குழு பொறுப்பாசிரியா் ரா. இளவரசி வரவேற்றாா். தாவரவியல் துறைப் பேராசிரியா் கே. சங்கா்கணேஷ், தமிழ்த் துறைப் பேராசிரியா் பி. முருகன் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டியில் மூன்றாமாண்டு இயற்பியல்துறை மாணவி மு. வினோதினி, மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி பா. பாரதி ஆகியோா் முதலிடத்தையும், முதுஅறிவியல் இயற்பியல் துறை மாணவி ஏ. சுமிதா இரண்டாம் இடத்தையும், மூன்றாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி எஸ். வேம்பரசி மூன்றாமிடத்தையும் பெற்றனா். லியோ சங்க ஒருங்கிணைப்பாளா் எம். ராஜேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com