மீன்வளா்ப்பை ஊக்குவிக்க மானியம்

தமிழ்நாட்டில் மீன்வளா்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டில் மீன்வளா்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்வளா்க்க மீன்குஞ்சுகள், மீன்தீவனம், உரங்கள் ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36,000-இல் 50 சதவீத மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.

எனவே, இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 41-ஏ, தென்பாதி பிரதான சாலை, பெஸ்ட் பள்ளி வளாகம் எதிரில், சீா்காழி - 609111 என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com