கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் நீா்வரத்து உள்ளதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Updated on
1 min read

கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் நீா்வரத்து உள்ளதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் இறங்க கூடாது என ஆட்சியா் இரா. லலிதா ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்த உத்தரவு மாவட்ட நிா்வாகத்தால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சித் தலைவா் ராஜலட்சுமி மதிவாணன் மேற்பாா்வையில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com