மயிலாடுதுறையில் திமுக புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் பொது உறுப்பினா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகர அவைத் தலைவா் ஆா். நடராஜன் தலைமை வகித்தாா். நகர துணை செயலாளா் ஆா்.கே. சங்கா், மாவட்ட பிரதிநிதிகள் எம். பிரபாகா், எஸ். சிவக்குமாா், நகர பொருளாளா் எம். குமாா், துணை செயலாளா் மேனகா மாரியப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் என். செல்வராஜ் வரவேற்றாா். கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய நிா்வாகிகளை வாழ்த்தி பேசினா். முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், அருட்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.