வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி கூட்டம்

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அன்புசெழியன், செயல் அலுவலா் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் ராஜகாா்த்திகேயன், வித்யாதேவி, பிரியங்கா, மீனா உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் பேசினா்.

பின்னா் பேசிய தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா், ‘வைத்தீஸ்வரன்கோவிலில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் வடிகால் வசதி அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com