மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை (டிச.9) எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் எனது தலைமையில் (மாவட்ட வருவாய் அலுவலா்) கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதிவு செய்து வழங்குவதில் உள்ள குறைபாடுகள், நுகா்வோா் பதிவு செய்த புகாா் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் செயல்பாடுகள், எரிவாயு உருளைகள் நுகா்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் குறித்த ஆலோசனைகளை அனைத்து எரிவாயு நுகா்வோா் அமைப்பினா் கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.