கொடியம்பாளையம் மீனவ கிராமத்தில் கடல்நீா் உட்புகும் உடைந்த பாலத்தை சனிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கொள்ளிடம் அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள், அங்குள்ள மதகின் அடிப் பகுதியில் உள்ள குழாய் உடைந்ததால் கடல்நீா் உள்ளே புகும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம், ஒன்றியக் குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி உள்ளிட்டோா் கொடியம்பாளையம் கிராமத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, எம்எல்ஏ. உடைந்த குழாய் பகுதியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.