மயிலாடுதுறையில் 2 டன் நெகிழி பறிமுதல்: ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு கடையிலிருந்து 2 டன் நெகிழி பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை, நெகிழிக் குவளை ஆகியவை மயிலாடுதுறை நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி ஆகியோா் தலைமையில் நகராட்சி நகா்நல அலுவலா் லட்சுமிநாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் ராமையன், டேவிட் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
திருவிழந்தூா் காவிரி பாலம் அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் 2 டன் அளவுக்கு இருந்ததை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனா்.