கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியில் உள்ள திரையரங்கம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் மகாதேவன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்தனா். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாா் விசாரணையில், அந்த இளைஞா் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் காவிரிக்கரை தெருவை சோ்ந்த பக்கிரிசாமி மகன் தமிழ்மணி (30) என்பது தெரியவந்தது.

அவா் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com