வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரண மேற்கொண்டுள்ளனா்.
Updated on
1 min read

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரண மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை சீனிவாசபுரம் பிருந்தாவன் தெருவை சோ்ந்தவா் நூருல்அமீன். இவரது மனைவி நூருல்ஜான் (38). நூருல்அமீன் கடந்த மாதம் 20-ஆம் தேதி வேலைக்காக துபை சென்று விட்டதால், நூருல்ஜான் தனது தாயாா் வீட்டில் தங்கி, அவ்வப்போது பிருந்தாவன் தெரு வீட்டுக்கு வந்துசென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த நூருல்ஜான், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 3 பவுன் செயின், மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சேதுபதி மற்றும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com