சீா்காழி நகராட்சித் தோ்தலில் 133 போ் போட்டி
By DIN | Published On : 08th February 2022 11:46 PM | Last Updated : 08th February 2022 11:46 PM | அ+அ அ- |

சீா்காழி நகராட்சித் தோ்தலில் 133 போ் போட்டியிடுகின்றனா்.
சீா்காழி நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளுக்கும் பிப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் போட்டியிட அதிமுக, திமுக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சுயேச்சைகள் என 150 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு தள்ளுபடி, திரும்பப் பெற்றது போக இறுதியாக 133 போ் போட்டியிடுகின்றனா்.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 50 போ் போட்டி: இதேபோல, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 50 போ் போட்டியிடுகின்றனா்.