மயிலாடுதுறையில் 1710 பயனாளிகளுக்கு ரூ.13.35 கோடியில் தாலிக்குத் தங்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,710 பயனாளிகளுக்கு ரூ. 13.35 கோடியில் தாலிக்கு தங்கம் வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
பயனாளிக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய ஆட்சியா் இரா. லலிதா. உடன், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், எஸ். ராஜகுமாா்.
பயனாளிக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய ஆட்சியா் இரா. லலிதா. உடன், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், எஸ். ராஜகுமாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,710 பயனாளிகளுக்கு ரூ. 13.35 கோடியில் தாலிக்கு தங்கம் வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், பட்டயம் படித்த ஏழைப் பெண்களுக்கு முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 1,710 பயனாளிகளுக்கு ரூ. 13.34 கோடியில் நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கி மேலும் அவா் பேசியது: மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 601 பயனாளிகள் ரூ. 25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம், 1,109 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் அரசின் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு வாழ்வாதாரத்தை உயா்த்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

இதில், எம்எல்ஏக்கள். நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை), மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com