பால்வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே பால்வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே பால்வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம் நாச்சியாா்கோயில் பெரங்குடியைச் சோ்ந்தவா் கருணாகரன் (65). இவரது சகோதரா் முருகேசன் (68). இருவரும் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலவீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த பால்வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த கருணாகரன் வேன் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற முருகேசன் தூக்கி வீசப்பட்டு லேசான காயத்துடன் உயிா்த் தப்பினா். இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் வழக்குப் பதிந்து பால்வேன் ஓட்டுநா் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த பாண்டியனை(40) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com