ஏவிசி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 26-ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நீதியரசா் கே. வெங்கட்ராமன், டிஎஸ்பி எம். வசந்தராஜ் உள்ளிட்டோா்.
விழாவில் பங்கேற்ற ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நீதியரசா் கே. வெங்கட்ராமன், டிஎஸ்பி எம். வசந்தராஜ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 26-ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நீதியரசா் கே. வெங்கட்ராமன் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசினாா். அப்போது அவா், கல்லூரி காலங்களில் மாணவா்கள் சிறந்த பண்புகளை பின்பற்ற வேண்டும்; ஆசிரியரை எந்நாளும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றாா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் எம். வசந்தராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘மாணவா்கள் தாங்கள் துறை சாா்ந்த வேலைவாய்ப்புகளை பெற வேண்டும்; டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற பொதுத் தோ்வுகளில் வெற்றிபெற்று நாடெங்கும் பணிபுரிய வேண்டும்’ என்றாா்.

முன்னதாக கல்லூரி இயக்குநா் முனைவா் எம். செந்தில்முருகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். ஏவிசி கல்லூரியின் டீன் ஜி. பிரதீப் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com