ஓய்வூதியா்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் தங்களது பதிவை புதுப்பித்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் தங்களது பதிவை புதுப்பித்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓய்வூதியா்களுக்கான 2022-ஆம் ஆண்டு வருடாந்திர நோ்காணல் ஜூலை முதல் செப்டம்பா் வரை நடைபெறுகிறது. நிகழாண்டு முதல் அஞ்சல் துறை மூலம் தங்களின் நோ்காணலை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட சாா்நிலைக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியா்கள் தொடா்புடைய கருவூல அலுவலகங்களில் நேரில் அல்லது அஞ்சல் துறையின் அந்தந்த பகுதி அஞ்சல் துறை ஊழியா்கள் மூலம் ரூ. 70 செலுத்தி ஓய்வூதியா்கள் தங்களின் இருப்பிடத்திலேயே பதிவை புதுப்பித்து கொள்ளலாம் அல்லது மத்திய அரசின் ‘ஜூவன் பிரமான்‘ வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியா்கள் இணைய வழி இ-சேவை மூலம் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இவற்றில் பதிவு செய்ய இயலாதவா்கள் உயிா்வாழ் சான்றிதழ் மூலம் பதிவை புதுப்பித்து கொள்ளவேண்டும். பதிவை புதுப்பிக்க தவறிய ஓய்வூதியா்கள் குடும்ப ஓய்வூதியா்களுக்கு அவா்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நவம்பா் 2022 முதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com