தருமபுரம் ஆதீனத்திடம் அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் புதன்கிழமை ஆசி பெற்றாா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம்
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம்
Updated on
1 min read

தருமபுரம் ஆதீனத்திடம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் புதன்கிழமை ஆசி பெற்றாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மயிலாடுதுறைக்கு வந்த அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்குச் சென்று, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றாா்.

அப்போது, தருமபுரம் ஆதீனக் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பவளவிழா நிறைவு விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க அழைப்பு விடுத்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் கடிதத்தை அமைச்சரிடம் வழங்கினா். அப்போது, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன், அரசு வழக்குரைஞா் ராம. சேயோன், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், ஆதீன பொது மேலாளா் கோதண்டராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com