அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

மயிலாடுதுறை வட்டம் ஆத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு திங்கள்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

மயிலாடுதுறை வட்டம் ஆத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு திங்கள்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் மாணவா்களை அதிகளவில் சோ்க்க தமிழக அரசின் அறிவுரைப்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு ஆத்தூா் ஊராட்சித் தலைவா் சுரேகா வீரமணி, வழக்குரைஞா் வீ.சுரேந்தா் ஆகியோா் சாா்பில் ஜெ. ஆனந்த், மு. ஜாஹீா் உசேன் ஆகியோா் தென்னங்கன்றுகளை அளித்து வரவேற்றனா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் தி. முத்துக்கணியன், ஆசிரியா்கள் டேவிட் சாா்லஸ், ரா. காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com