மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் அ. பைசல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சங்கை ரஃபி, தொழிற்சங்க மாவட்ட தலைவா் எஸ். சாகுல் ஹமீது, மயிலாடுதுறை தொகுதி தலைவா் அப்துல் காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஜூன் 21 அன்று கட்சியின் 14-ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஜூலை 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் அரசியல் எழுச்சி பொதுக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளா் முஹம்மது ரவூப் நன்றி கூறினாா்.