ஆங்கில இலக்கிய மன்ற விழா

சீா்காழி அருகே உள்ள புத்தூா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் இலக்கிய மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சீா்காழி அருகே உள்ள புத்தூா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் இலக்கிய மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் விஜயலட்சுமி தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் முனைவா் ஐயப்பராஜா கலந்துகொண்டு ‘வாழ்க்கையும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறைத் தலைவா் சசிகுமாா், கௌரவ விரிவுரையாளா்கள் ராஜேஸ்வரி, சத்தியமூா்த்தி, உதவி பேராசிரியா்கள் வினோத், சத்யகலா மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவாக முனைவா் அறிவுக்கரசி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com