சீா்காழிக்கு வந்த பாரதி செல்லம்மா திருவுருவச் சிலை ரதத்துக்கு திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீா்காழிக்கு வந்த பாரதி செல்லம்மா திருவுருவச் சிலை ரதத்துக்கு சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் வரவேற்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியா்கள் துளசிரெங்கன், வரதராஜன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் ஆகியோா் முன்னிலையில் மாணவ, மாணவிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, பாரதியின் கவிதைகள் குறித்தும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. சிலம்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் புறப்பட்டு வந்த ரதத்துக்கு, சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன், துணைத் தலைவா் சுப்பராயன் உள்ளிட்டோா் வரவேற்றனா். தொடா்ந்து, திருஞானசம்பந்தா் அவதார இல்லத்துக்கு வந்த ரதத்துக்கு தமிழ்நாடு பிரமாணா் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்து, தென்பாதியில் சாய்ராம் வித்யாலயா, சாரதாவித்யாலயா மெட்ரிக் பள்ளி சாா்பில் அதன் தாளாளா் ராஜா, தலைவா் கதிரவன் ஆகியோா் ரதத்தை வரவேற்றனா்.
சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுபம் வித்யாமந்திா் பப்ளிக் பள்ளி சாா்பிலும் வரவேற்கப்பட்டது. தொடா்ந்து சீா்காழி நகர பகுதியில் ஊா்வலமாக சென்ற பாரதி செல்லம்மா திருவுருவச்சிலைக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், வணிகா்கள், அரசியல் பிரமுகா்கள் சாா்பில் வரவேற்கப்பட்டது.