இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 16th May 2022 10:54 PM | Last Updated : 16th May 2022 10:54 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மணல்மேடு அருகேயுள்ள ஆதமங்கலம் கீழத்தெருவை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி மீனலோசனி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மீனலோசனிக்கும் அவரது மாமனாா், மாமியாருக்கும் இடையே நீண்ட நாள்களாக பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், முருகன்- மீனலோசனி தம்பதி தலைஞாயிறு கிராமத்தில் உள்ள முருகனின் சகோதரியின் வீட்டுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு குடிவந்தனா்.
இந்நிலையில், மனஉளைச்சலில் இருந்த மீனலோசனி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் இறந்துவிட்டாா்.
இதுகுறித்து மீனலோசினியின் தாயாா் சுபலெட்சுமி அளித்த புகாரின் பேரில், மணல்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மேலும், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...