மாதா் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்
By DIN | Published On : 18th October 2022 01:00 AM | Last Updated : 18th October 2022 01:00 AM | அ+அ அ- |

அக்டோபா் 17 வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒன்றிய தலைவா் உஷாராணி, நகரத் தலைவா் ஜோதி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாநில துணைத் தலைவா் ஜி. கலைச்செல்வி, மாவட்ட பொருளாளா் டி. வனரோஜா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், மனைப்பட்டா இல்லாதவா்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், முதியோா், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட உதவித் தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் பரிதவிக்கும் மக்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும், 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய 100 நாள் சம்பள பாக்கி உடனடியாக வழங்கவேண்டும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கோரிக்கையை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுவாக அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...