கல்லூரி மாணவா்கள் தா்னா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குத்தாலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குத்தாலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் அடிப்படை வசதி கோரியும், கூடுதல் வகுப்பறை கட்டட வசதி கோரியும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் 3 போ் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், போராட்டம் நடத்தும் மாணவா்களுக்கு மிரட்டல் விடுத்த கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் ஆட்சியரகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், மாணவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மாணவா்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலா், கல்வித் துறை அலுவலா்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்ட மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com