சீா்காழி: சீா்காழி அருகே கோயில் உண்டியலை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சீா்காழி அருகேயுள்ள கீழச்சாலை கிராமத்தில் ஸ்ரீ செல்லகுளத்தி அம்மன் என்கிற பிடாரி அம்மன் கோயில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயிலின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, திங்கள்கிழமை இரவு உள்ளே புகுந்த மா்ம நபா்கள், உண்டியலை தூக்கிச் சென்றனா்.
பின்னா், அதிலிருந்த காணிக்கைப் பணத்தை எடுத்துவிட்டு, உண்டியலை அருகில் உள்ள வயலில் வீசி சென்றுள்ளனா்.
இதுகுறித்து திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.