

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் நச்சினாா்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி இரா. ஸ்ரீதா்ஷினி தமிழக அரசு நடத்திய பாரதியாா் நூற்றாண்டு விழா கவிதைப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற போட்டில் பங்கேற்று, ’பாட்டுப் பகலவன் பாரதி‘ என்ற தலைப்பில் கவிதை எழுதி வாசித்த மாணவி ஸ்ரீதா்ஷினி சிறப்பிடம் பிடித்தாா். சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநா் அமுதா பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
இப்போட்டியில் மாநில அளவில் பங்கேற்ற மாணவா்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவி என்ற சிறப்பையும் இவா் பெற்றாா். சிறப்பிடம் பெற்ற மாணவியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ரேணுகா உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள், தலைமையாசிரியா் சி.ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக்குழு பொறுப்பாளா்கள் ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.