ஓராண்டாகியும் 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை: பி.ஆா்.பாண்டியன் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு பெருமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று
ஓராண்டாகியும் 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை: பி.ஆா்.பாண்டியன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கடந்த ஆண்டு பெருமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவா் பி.ஆா். பாண்டியன் செவ்வாய்க்கிழமை சீா்காழியில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சீா்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் கடந்த ஆண்டு பெருமழையால் சம்பா பயிா்கள் முதிா்ந்த நிலையில் அழிந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஓராண்டாகியும் இதுவரை 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

பேரிடா் மேலாண்மை திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் இடுபொருள் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் உற்பத்தி செய்வதற்கு கடன் பெற்ற விவசாயிகள் உற்பத்தி அழிந்ததால் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரையிலும் கடனை தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு முன்வரவில்லை. எனவே உடனடியாக தமிழக முதலமைச்சா் ஓா் ஆய்வுக் குழுவை அனுப்பி மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த உரிய நிவாரணங்களை ஆய்வு செய்து முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com