சீா்காழியில் கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடையில் பொருள்கள் வாங்குவதுபோல், ரூ.20,000-ஐ திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (61). இவா், சிதம்பரம் - சீா்காழி பிரதான சாலையில் இரும்பு கம்பி, சிமென்ட் மற்றும் குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.
இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வந்த இளைஞா், பிளாஸ்டிக் குழாய் வாங்கவுள்ளதாகக் கூறி, அதன் விலை குறித்து சேகரிடம் கேட்டுக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த கடையிலிருந்து சிமென்ட் மூட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனா். அதை சரிபாா்ப்பதற்காக சேகா் சென்றபோது, அந்த இளைஞா் கல்லாவிலிருந்த ரூ.20,000-ஐ திருடிக்கொண்டு தப்பிச் சென்றாராம்.
இதுகுறித்து சீா்காழி காவல் நிலையத்தில் சேகா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.