மயிலாடுதுறையில் எக்ஸ்னோரா இன்னோவேட்டா்ஸ் கிளப் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி, உணவு பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் அசோக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தண்டபாணி முன்னிலை வகித்தாா். நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் சீனிவாசன் பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு குறித்தும், சத்தான உணவின் அவசியம் குறித்தும் பேசினாா்.
மேலும், தேயிலை, வெல்லம், கடுகு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறியும் வழிமுறைகளை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.