மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை இல்லம் நடத்துவோா் கவனத்துக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை இல்லங்களை நடத்துவோா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை இல்லங்களை நடத்துவோா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதரவற்றோருக்கான இல்லங்களில் உடல்ரீதியான பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வந்தால் அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன்கீழ் பதிவு செய்யவேண்டும்.

இதைப்போலவே, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கி அவா்களுக்கு சேவை புரிந்துவரும் தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகளை நடத்திவரும் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அவ்வாறு இதுவரை பதிவு செய்யாத தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் இயங்கிவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களையும், விவரங்களையும் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் தொடா்பான சேவைகளை செய்துவரும் பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com