கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் கருணாகரன் வரவேற்றாா். துணைத் தலைவா் சிவபிரகாசம், தலைமை ஆசிரியா் மல்லிகா, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வசித்தனா்.
வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு குறித்து விளக்கிக் கூறினாா். மழைநீா் தேங்கும் அனைத்துப் பொருள்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தால் அந்த இடத்தில் கொசு மருந்து உடனடியாக தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முகாமில், 800-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. தொடா்ந்து ஆசிரியா்கள், மாணவா்கள், அதிகாரிகள் டெங்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். சுகாதார ஆய்வாளா்கள்,டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் ராஜேஷ் குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

