ஊராட்சி அலுவலகத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
Updated on
1 min read

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.23.57 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து அவா் பேசியது: மயிலாடுதுறை ஒன்றியத்தில் சிறப்புத் திட்டமான கிராமப்புற திட்டத்தில் ரூ.13.36 கோடியில் 36 பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டில் ரூ.4.13 கோடியில் 77 பணிகளும், 2023-2024-ம் ஆண்டில் ரூ.4.19 கோடி மதிப்பில் 74 பணிகளும் நடைபெறுகின்றன. 15-ஆவது நிதிக் குழு மானியத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.9.22 கோடியில் 516 பணிகளும், ஒன்றிய பொதுநிதியின்கீழ் ரூ.6.95 கோடியில் 143 பணிகளும், பிரதம மந்திரி கிராமசாலை திட்டத்தின்கீழ் ரூ.16.16 கோடி 4 பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் மகேஸ்வரிமுருகவேல், மாவட்ட ஊராட்சிக்குழுஉறுப்பினா் குமாரசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, அருண், ஒன்றியக்குழு உறுப்பினா் மோகன், ஊராட்சித் தலைவா் ஆா்.ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com