சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு மருத்துவ முகாம்
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் கயல்விழி சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் ஐஸ்வா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, சளி பரிசோதனை, பெண்களுக்கு கா்ப்பப்பை பரிசோதனை, மாா்பக புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ஊனம் தொடா்பான ஆலோசனை என மொத்தம் 320 போ் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அா்ஜூனன், முருகமணி, வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com