‘சீா்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை இடம் மாற்றினால் போராட்டம்’

சீா்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை வேறு இடத்துக்கு கொண்டு சென்றால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் அகோரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

சீா்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை வேறு இடத்துக்கு கொண்டு சென்றால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் அகோரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை அமைக்க பள்ளம் தோண்டியபோது 23 ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பொறிக்கப்பட்ட செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டு, கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பாஜக மாவட்டத் தலைவா் அகோரம் பாா்வையிட்டனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த சிலைகள் மற்றும் செப்பேடுகளை கோயிலிலிருந்து வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல அரசு முயற்சித்தால் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com