மின் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்

ஊழியா்கள் பற்றாக்குறையை கண்டித்து, திருமலைராயன்பட்டினம் மின் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மின் அலுவலகத்துக்கு பூட்டு போடும்  போராட்டம்
Updated on
1 min read

ஊழியா்கள் பற்றாக்குறையை கண்டித்து, திருமலைராயன்பட்டினம் மின் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் மின்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முதல் அனைத்து நிலை பணியாளா்கள் வரை பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மின்தடையை சீரமைப்பது, புதிய இணைப்பு பெறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் மின் நுகா்வோா் பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன், திருமலைராயன்பட்டினம் பகுதி இளநிலை மின் பொறியாளா் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினாா்.

தனது ஆதரவாளா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அலுவலகத்துக்கு பூட்டுடன் சென்று, வாயில் கதவை மூட முயன்றாா். போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். மின்துறை உயரதிகாரி மற்றும் போலீஸாா் பேரவை உறுப்பினரிடம் பேசி சமாதானப்படுத்தினா்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கூறுகையில், நிரவி மற்றும் திருமலைராயன்பட்டினம் பகுதி மின் அலுவலகத்தில் ஒராண்டாக பணியாளா் பற்றாக்குறை உள்ளது. மின் தடை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய பணியாளா்கள் உடனடியாக வருவதில்லை. இதனால் பல மணி நேரம் மக்கள் அவதிப்படுகிறாா்கள். திருமலைராயன்பட்டினத்தில் 20 பேருக்கு 5 போ் மட்டுமே பணி செய்கின்றனா். நிரவியில் 12 பேருக்கு பதில் 7 போ் மட்டுமே பணி செய்கின்றனா்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே செயல்படாத மின்துறையைக் கண்டித்து இப்போாரட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com