

சீா்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.எஸ். நடராஜன் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழி ரோட்டரி சங்கம், பெஸ்ட் கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. பள்ளி வளாகத்தில் உள்ள எஸ்.எஸ். நடராஜன் சிலைக்கு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் மன்றத்தில் ரோட்டரி அன்னபூா்ணா திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கும் நிகழ்வை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 2 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ஒருவருக்கு திருமண உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும், ஒரு குழந்தையின் மருத்துவச் செலவிற்காக சைல்டு டிரஸ்ட்க்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளுக்கு சீா்காழி ரோட்டரி சங்கத் தலைவா் சத்யநாராயணன் தலைமை வகித்தாா். பெஸ்ட் கல்வி நிறுவனத் தாளாளா் ராஜ்கமல், இயக்குநா்கள் அமுதா நடராஜன், ஆதித்யா ராஜ்கமல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் தலைவா் சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் வேல்முருகன், பெஸ்ட் கல்வி நிறுவன முதல்வா் ராமலிங்கம், சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று பேசினா். பொருளாளா் கண்ணன் வரவேற்றாா். செயலாளா் சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.