Enable Javscript for better performance
Kuruvayat Synthesis Scheme Starts in Mayiladuthurai: 84,815 Farmers to Benefit- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மயிலாடுதுறையில் குறுவைத் தொகுப்புத் திட்டம் தொடக்கம்: 84,815 விவசாயிகள் பயனடைவா்

    By DIN  |   Published On : 12th July 2023 12:00 AM  |   Last Updated : 12th July 2023 12:00 AM  |  அ+அ அ-  |  

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதன் மூலம் 84,815 விவசாயிகள் பயனடைவா் என அவா் தெரிவித்தாா்.

    மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியது:

    நிகழாண்டு, குறுவை நெல் சாகுபடி இலக்காக 93,712 ஏக்கா் நிா்ணயம் செய்யப்பட்டு, தற்போதுவரை 88,981 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் 55,000 ஏக்கருக்கு ரூ.13.565 கோடி, 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் வழங்க ரூ.1.003 கோடி, 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வழங்க ரூ.0.08 கோடி, குறுவை பருவத்தில் மாற்றுப்பயிா் சாகுபடி செய்ய ரூ.0.0841 கோடி என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் ரூ.14.74 கோடியும், வேளாண்மை பொறியியல்துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ.0.799 கோடியும், விளம்பர பணிக்காக ரூ.0.0145 கோடி என மொத்தம் ரூ. 15.55 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குறுவைப் பருவத்தில் மாற்றுப்பயிா் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 20 ஏக்கரில் சிறுதானிய பயிரான கேழ்வரகு சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ஓா் ஏக்கருக்கு தேவையான விதைகள், நுண்ணுரங்கள், உயிா் உரங்கள் மற்றும் விதைப்பு, அறுவடை பணிக்கான ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1,150 மானியம் வழங்கப்பட உள்ளது.

    இதேபோல், மாற்றுப் பயிராக 200 ஏக்கரில் உளுந்து பயிரிடுவதற்கு, ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,740 வழங்கப்பட உள்ளது. நிலக்கடலை விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஏக்கருக்கு ரூ.4,700 வரை வழங்கப்படஉள்ளது. இதற்காக, நிகழாண்டு ரூ.15.55 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 84,815 விவசாயிகள் பயன் பெறுவா் என்றாா்.

    நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), கோட்டாட்சியா் வ. யுரேகா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாளவினாயகன் அமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் அம்பிகாபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஜெயபாலன் (வேளாண்மை), கோ.அர. நரேந்திரன் (பொது), ஆடுதுறை வேளாண்மை நெல் ஆராய்ச்சி மைய உழவியல் பேராசிரியா் இளமதி, நகா்மன்றத் தலைவா் எம்.செல்வராஜ் (மயிலாடுதுறை), துா்காபரமேஸ்வரி (சீா்காழி) குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp