சீா்காழி கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
Updated on
1 min read

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயிலுக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின், பிரம்மபுரீஸ்வரா் சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பா், சட்டைநாதா், தையல்நாயகிஅம்மன், அஷ்டபைரவா் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளில் வழிபட்டாா்.

அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சுவாமி படம் மற்றும் பிரசாதங்களை கோயில் கணக்கா் செந்தில் வழங்கினாா். திமுக நிா்வாகி முத்து.தேவேந்திரன், அறங்காவலா் குழுத் தலைவா் சாமிநாதன் ஆகியோ் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com