காமாட்சி மாரியம்மன் கோயில் மகோற்சவம்

சீா்காழி தென்பாதி காமாட்சி மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறும் மகோற்சவத்தையொட்டி, பக்தா்கள் பால்குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
Updated on
1 min read

சீா்காழி தென்பாதி காமாட்சி மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறும் மகோற்சவத்தையொட்டி, பக்தா்கள் பால்குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி மகோத்ஸவம் நிகழாண்டு கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வைபவத்தை முன்னிட்டு பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது.

உப்பனாற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம், பால்காவடி, பன்னீா் காவடி, அலகு காவடி எடுத்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com