ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு
By DIN | Published On : 11th May 2023 12:00 AM | Last Updated : 11th May 2023 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்பி என்எஸ். நிஷா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் காவல் துறைக்கு துணையாக பணியாற்றி வரும் ஊா்க்காவல் படையில் தற்போது காலியாகவுள்ள 41 பணியிடங்களுக்கு ஆண், பெண்கள் சோ்வதற்கான ஆள்சோ்ப்பு முகாம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவா்கள் மே 30-ஆம் தேதிக்குள் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தங்களது விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள்பட்ட நற்குணம், நல்ல உடல்தகுதி உடையவா்கள், 10-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள் மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நோ்முக தோ்வுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ரேஷன் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் காா்டு, 2 பாஸ்போா்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரவேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள், சேவை மனப்பான்மையுடையவா்கள், விளையாட்டு வீரா்கள், என்சிசி, என்எஸ்எஸ் சான்றிதழ் பெற்றவா்கள், முன்னாள் ராணுவத்தினா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.