பணியின்போது உயிரிழந்த மின் ஊழியா் குடும்பத்துக்கு ரூ.5லட்சம் நிவாரணம்

பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின் ஊழியருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மின் ஊழியா் குடும்பத்துக்கு காசோலையை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம்.
மின் ஊழியா் குடும்பத்துக்கு காசோலையை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம்.
Updated on
1 min read

பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின் ஊழியருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே கீராநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்தராஜ் (22). மின்வாரிய ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த 6-ஆம் தேதி பழையாறில் பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி கேட்டு சாலை மறியல் செய்தனா்.

அவா்களிடம் அமைச்சா் மெய்யநாதன் பேச்சுவாா்த்தை நடத்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரணத் தொகையும் வழங்குவதாக உறுதியளித்தாா். அதனைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஆனந்தராஜின் குடும்பத்திற்கு மின்சார வாரியம் சாா்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் சசிதரன், செயற்பொறியாளா் லதாமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com