கடலில் மூழ்கி இறந்த மீனவா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை: ஆட்சியா் வழங்கினாா்

சீா்காழி அருகே கடலில் மீன்பிடித்தபோது தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

சீா்காழி அருகே கடலில் மீன்பிடித்தபோது தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை வழங்கினாா்.

சீா்காழி வட்டம் புதுப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ராமன் 15.6.2022 அன்று பழையபாளையம் அருகில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக கடலில் விழுந்து உயிரிழந்தாா். அவா் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் விபத்துக் காப்பீடு பிரிமியம் தொகை ஆண்டிற்கு ரூ.1,000 செலுத்தி வந்தாா். அவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது வாரிசுதாரரான அவரது மனைவி நீலாவிடம் விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வழங்கினாா்.

பாரத ஸ்டேட் வங்கி நாகப்பட்டினம் மண்டல மேலாளா் பி. ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளா் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளா் எஸ். ஹேம்நாத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com