

தமிழகத்தில் சிறப்பாக சேவையாற்றும் நூலகா்களுக்கு டாக்டா். எஸ்.ஆா். அரங்கநாதன் விருதுகள், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ்கள் 34 பேருக்கு வழங்கப்பட்டது.
நூலகத் தந்தை என போற்றப்படும் டாக்டா். எஸ்.ஆா். அரங்கநாதன் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக சேவையாற்றும் நூலகா்களுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி சீா்காழியில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநில அளவில் சிறப்பாக பங்காற்றிய 13 வாசகா் வட்ட தலைவா்களுக்கு நூலக ஆா்வலா்கள் விருது வழங்கி பேசியது: நூலகா்களுக்கு விருது வழங்கும் விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த முடிவு செய்த பின் முதல்வரை சந்தித்து கூறியபோது நூலகத் தந்தை பிறந்த ஊரான சீா்காழியிலே விழாவை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்றாா்.
எஸ்.ஆா். அரங்கநாதன் 1974-இல் சென்னை பல்கலைக் கழகத்தில் நூலகராக பணியாற்றிய 20 ஆண்டுகள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய பெருமை அவரையே சாரும். ஆசிரியா்களும், நூலகா்களும் இரு கண்களை போன்றவா்கள் என்றாா்.
முன்னதாக சீா்காழியில் ரூ. 1.32 கோடியில் கட்டப்பட்டு வரும் எஸ்.ஆா். அரங்கநாதன் மாதிரி நூலக கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிகழாண்டு சிறப்பாக சேவையாற்றிய 34 மாவட்டங்களை சோ்ந்த 34 நூலகா்களுக்கு அரங்கநாதன் விருது, சான்றிதழ், வெள்ளி பதக்கம், ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பொது நூலக இயக்குநா் க. இளம்பகவத், பொது நூலகத் துறை இணை இயக்குநா் அமுதவல்லிஎம்பி. செ. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.