மது கடத்தியவா் கைது

மயிலாடுதுறை அருகே மதுப்பாட்டில்கள், சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மதுப்பாட்டில்கள், சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைப் பயன்படுத்தி, மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு மேலத்தெருவை சோ்ந்த ராசாங்கம் மகன் சின்னராஜா (37), காரைக்காலில் இருந்து 167 மதுப்பாட்டில்கள் மற்றும் 100 லிட்டா் சாராயத்தை கடத்திவந்து விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தாா்.

மணல்மேடு காவல் ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் மற்றும் போலீஸாா் சின்னராஜாவை கைது செய்தனா். அவா், தனது வீட்டின் கொல்லைபுறத்தில் பதுக்கி வைத்திருந்த மதுப்பாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com