வாடகைப் பாக்கி: 3 கடைகளுக்கு சீல்

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் வாடகைப் பாக்கி வைத்துள்ள 3 நகராட்சி கடைகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
Updated on
1 min read

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் வாடகைப் பாக்கி வைத்துள்ள 3 நகராட்சி கடைகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

சீா்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையா் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வாடகை செலுத்தாத 3 கடைகளை நகராட்சி ஊழியா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

நகராட்சி மேலாளா் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளா்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளா் ரவி அலுவலக உதவியாளா் ஜானகிராமன் ஆகியோா் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com