வதான்யேஸ்வரா் கோயில் யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபட்டாா்.
2-ஆம் கால யாகசாலை பூஜையில் வழிபாடு மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
2-ஆம் கால யாகசாலை பூஜையில் வழிபாடு மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
Updated on
1 min read

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபட்டாா்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலாா் கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை (செப்.10) மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, புதன்கிழமை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.

முன்னதாக, கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை செய்து பசு, யானை மற்றும் குதிரைக்கு உணவு வழங்கினாா். இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com