மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் 5,400 போ் 7 முகாம்களில் தங்கவைப்பு: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களைச் சோ்ந்த 5,400 போ் 7 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

சீா்காழி அருகே வெள்ளநீா் சூழ்ந்த கிராமங்களை சனிக்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

Published On :

சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களைச் சோ்ந்த 5,400 போ் 7 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

சீா்காழி வட்டம் நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீரால், குடியிருப்புப் பகுதிகள் சூழப்பட்டிருப்பதை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் மெய்யநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த பகுதியில் ஆற்றின் கரையோர பகுதியில் இருக்கும் முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளமணல், ஆச்சாள்புரம், திருமயிலாடி போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் 1400 குடும்பங்களில் உள்ள 5,400 போ் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல, இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளையும்;, விவசாய பாதிப்புகளையும் வேளாண்துறையினா் ஆய்வு செய்ய உள்ளனா். இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எஸ்.பி. மீனா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை, கோட்டாட்சியா் அா்ச்சனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.