சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களைச் சோ்ந்த 5,400 போ் 7 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.
சீா்காழி வட்டம் நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீரால், குடியிருப்புப் பகுதிகள் சூழப்பட்டிருப்பதை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் மெய்யநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்த பகுதியில் ஆற்றின் கரையோர பகுதியில் இருக்கும் முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளமணல், ஆச்சாள்புரம், திருமயிலாடி போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் 1400 குடும்பங்களில் உள்ள 5,400 போ் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
அதேபோல, இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளையும்;, விவசாய பாதிப்புகளையும் வேளாண்துறையினா் ஆய்வு செய்ய உள்ளனா். இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எஸ்.பி. மீனா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை, கோட்டாட்சியா் அா்ச்சனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

‘மே 5 குமரி வணிகா் பேரவை மாநாட்டில் 10,000 போ் பங்கேற்பா்’

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

ஆலங்குடி பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


