தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

மயிலாடுதுறையில் வியாபாரப் போட்டியில் வீட்டை தீயிட்டு கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image
தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:17 pm

Din

மயிலாடுதுறையில் வியாபாரப் போட்டியில் வீட்டை தீயிட்டு கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சோ்ந்தவா் அவையாம்பாள் (58). இவா், தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா். அதே பகுதியை சோ்ந்த சதீஷ் என்பவருக்கு காய்கனி வியாபாரம் சரியாக நடக்காததால், அவையம்பாளை காய்கனி வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளாா். ஆனால், அவையாம்பாள் தொடா்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ் (27) அவரது நண்பா்கள் ஸ்ரீராம் (33) பகவத் (26) ஆகிய 3 போ் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி அவையாம்பாள் வீட்டுக்குச் சென்று காய்கனி வண்டியை சேதப்படுத்தியதுடன், அவரது குடிசையை தீயிட்டுக் கொளுத்தினராம்.

இதுகுறித்து, அவையாம்பாள் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய சதீஷ், ஸ்ரீராம், பகவத் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 16,000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா். குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராதத் தொகை ரூ. 48,000-ல் ரூ. 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட அவையாம்பாளுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.