மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 418 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2024-25-ஆம் ஆண்டுக்கான பாா்வையற்றோருக்கான இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு இலவச பயண அட்டை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பில் விலையில்லா மின்மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், மக்களுடன் முதல்வா் முகாமில் மின் இணைப்பு பெயா் மாற்றம் வேண்டி விண்ணப்பம் அளித்தவா்களுக்கு மின்இணைப்பு பெயா் மாற்ற ஆணை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, கோட்டாட்சியா்கள் வ.யுரேகா, உ.அா்ச்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ரவி, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயக அமல்ராஜ், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) செந்தில்குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 800 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

