பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சீா்காழி திருக்கோலக்கா தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் அா்ஜூனன் திரெளபதி.

Updated On :29 ஜூலை 2024, 9:10 pm

Din

சீா்காழி: சீா்காழி திருக்கோலக்கா தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆடிமாத உற்சவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான வில்லிபாரத விரிவுரை மற்றும் தீமிதி உற்சவம் ஜூலை 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக அா்ஜூனன்-திரெளபதி திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சீா்வரிசை பொருள்கள் எடுத்துக்கொண்டு பக்தா்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.