மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

Published On :

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் தொடா் மின் வெட்டு காரணமாக குடிநீா் தட்டுப்பாடு, விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டாா் கொண்டு நிகழாண்டுக்கான குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி, வயல்களில் உழவடித்தல் மற்றும் நாற்றாங்கால் தயாரிப்புப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

சோழம்பேட்டை ஊராட்சியில் விவசாயிகள் சுமாா் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி பணியை தொடங்கி உள்ளனா். இப்பகுதியில் தொடா் மின்வெட்டால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், மின்வாரியத் துறையை கண்டித்தும் சோழம்பேட்டை ஊராட்சியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூவலூா் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் போலீஸாா், மின்வாரியத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தால் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.